புதன், 23 செப்டம்பர், 2009

Inspite of court injuction the Actors wife entered the tenant premises with the local rowdy's

நடிகர் விவேக் மனைவி மீது பிரபல தமிழ் எழுத்தாளர் போலீசில் புகார்


வீட்டை காலி செய்யும்படி ரவுடிகளுடன் வந்து மிரட்டுவதாக சிரிப்பு நடிகர் விவேக்கின் மனைவி மீது பிரபல தமிழ் எழுத்தாளர் சுப்ரஜா போலீசில் புகார் செய்துள்ளார்.

இதுகுறித்து கே.கே.நகர் போலீசில் அவர் அளித்துள்ள புகாரில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நான் சினிமா நடிகர் விவேக் வீட்டில் கடந்த 4 1/2 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். வீட்டை காலி செய்யும்படி கடந்த மார்ச் மாதம் விவேக் சில ரவுடிகளுடன் வந்து என்னை மிரட்டினார். இதுகுறித்து நான் ஏற்கனவே கொடுத்த புகார் மீது விசாரணை நடக்கிறது.


இந்த நிலையில் 11-ந் தேதி (நேற்று) நான் வீட்டில் இல்லாத நேரத்தில் எனது வீட்டுக்கு விவேக்கின் மனைவி அருள்செல்வி, வக்கீல் மற்றும் சில முகம் தெரியாத ரவுடிகள் வந்து எனது மகனை பிடித்து வெளியே தள்ளினர். பின்னர் வீட்டுக்குள் நுழைந்து புகைப்படங்கள் எடுத்தனர்.

இதுகுறித்து எனது மகன் என்னிடம் போன் மூலம் தகவல் கூறினான். நான் உடனே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தேன். நான் வீட்டில் இல்லாத சமயத்தில் வீட்டுக்குள் நுழைந்து ரவுடித்தனம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த புகாரை கே.கே.நகர் போலீசார் பதிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக